“முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா?” என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முருகனை தேவையில்லாமல் தொடக்கூடாது என்பதை சொல்வதற்குதான் மாநாடு என தெரிவித்தார். ஆன்மீகமும் அரசியலும் தமிழகத்தில் கலந்தே இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரவர் தெய்வத்தை உரிமையுடன் கும்பிட அரசியல் சாசனம் இடமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகள் கடவுளை பயன்படுத்திக் கொள்வதற்கு அரசியல் சாசனத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. அதற்காக, தமிழ்நாட்டில் முருகனை எவ்வளவு வேண்டுமானாலும் வசை பாடுவீர்களா?அதை பார்த்துகொண்டு இருக்க வேண்டுமா? கந்த சஷ்டி கவசத்தை எதற்காக வசை பாடினார்கள்? அதற்காக தான் முருகன் வேலை தூக்கிக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போனார் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் மகாராஷ்டிரத்தில் கூட இதே போல ஒரு விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும். நானும் உடன் இருப்பேன். இறைவனை வழிபடுவதற்கு மொழி தேவையில்லை என்றும் அவர் கூறினார்.