பிரேசிலின் கிராண்டேய் நகரில், வானில் பறந்த வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததில், 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசிலின் பிரபல சுற்றுலாத் தலமான கிராண்டேயில், 21 பயணிகளை ஏற்றிச் சென்ற வெப்பக் காற்று பலூன் விபத்தில் சிக்கியது. இதையடுத்து வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.