ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயன போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்துள்ள , ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகியவற்றை அமெரிக்கா “வெற்றிகரமாக” தாக்கியதாகவும், முதன்மை இலக்காக ஃபோர்டோவில் “முழு குண்டுகள்” வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை முடித்த அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளதாகவும் என்று டிரம்ப் கூறினார். “நமது மகத்தான அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் வேறு எந்த இராணுவத்தாலும் இதைச் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது அமைதிக்கான நேரம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.