சென்னை நீலாங்கரையில் கோயிலில் கொள்ளையடிக்க முயன்ற போது திருடன் செல்போனை மறந்து விட்டு சென்ற நிலையில் அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாம்பரி நீலகண்டேஸ்வரர் கோயிலில் இரவில் ஆள் நடமாட்டம் இருப்பதாக கோயில் நிர்வாகியான விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தசரதன் என்பவரை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.
பிறகு உண்டியலின் கீழே ஒரு செல்போன் இருப்பதையும் கண்ட அவர்களை அதனை போலீசாரிடம் ஒப்படைத்து கொள்ளை சம்பவம் குறித்து தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.