கரூர் அருகே முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் செல்வோர் வேறு கோயிலுக்குச் செல்லக்கூடாது எனக் கூறி பாஜகவினரை காவல்துறை தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சேலத்தில் இருந்து பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் புறப்பட்டனர்.
அவர்கள் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்வதற்காகச் சென்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, மாநாட்டுக்குச் செல்வோர் வேறு கோயிலுக்குச் செல்லக்கூடாது எனக் கூறி காவல்துறையினர் அரஜாகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பாஜகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோயிலுக்குச் செல்லக் கூடாது என காவல்துறையினர் அத்துமீறிய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.