பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் தேர் செல்ல முடியுமா என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேப்பந்தட்டை கிராமத்தில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஆய்வுக் குழுவை நியமித்த சென்னை உயர்நீதிமன்றம் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் தேர் செல்வதற்குச் சாத்தியக்கூறு உள்ளனவா என ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
அதன் பேரில் ஆய்வுப்பணியை மேற்கொண்ட அதிகாரிகள் தேரின் அகலம் மற்றும் உயரத்தையும், தெருவின் அகலத்தையும் அளவிட்டனர்.