ஈரோடு அருகே பானிபூரி விற்பனை செய்வது தொடர்பாக இரு கடைக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்தார்.
தண்ணீர்ப்பந்தல் பாளையத்தில் உள்ள பிரபல பல்பொருள் விற்பனை நிலையம் முன்பு ஏராளமான சாலையோர கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் இங்கு அருகருகே இயங்கி வரும் பானி பூரி கடைக்காரர்கள் இருவரிடையே விற்பனை தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில், சதீஷ்குமார் என்பவர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார், சதீஷ்குமாரை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.