ரிஷிவந்தியம் அருகே விஜய்யின் பிறந்த நாள் பேனர் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் 2 பேரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் பகுதியில் தவெக நிர்வாகிகள் பேனர் வைத்துள்ளனர்.
பேனர் வைக்கக் கூடாது என தவெகவினரை திமுகவினர் எச்சரித்ததாகவும், அதனை மீறி பேனர் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நள்ளிரவில் பேனர் கிழிக்கப்பட்டதால், திமுக, தவெகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், சரவணன், ஜெயமனி ஆகியோரின் மண்டை உடைந்து இரத்த காயங்களுடன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.