கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அனுமகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் 34 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் கழிவறைக்குப் பயன்படுத்தும் நீரை வீட்டிலிருந்து எடுத்துவர வேண்டும் எனப் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டுமெனப் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.