போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக உரையாடினார்.
இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரானின் 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக உரையாடினார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி ஈரானின் தற்போதைய நிலை குறித்து அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான சமீபத்திய தாக்குதல் குறித்து கவலை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிராந்திய அமைதி மற்றும் பதற்றத்தைக் குறைக்க மீண்டும் வலியுறுத்தியதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.