பல மணி நேரமாக வீட்டின் வெளியே காத்திருந்தவர்களை நடிகரும், தவெக தலைவருமான விஜய் கண்டுகொள்ளாமல் காரில் புறப்பட்டு சென்றதால் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
தவெக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை ஒட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைக் கூற அவரது நீலாங்கரை வீட்டின் முன்பு காலையில் இருந்து ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ரசிகர்களும் விஜய் வீட்டின் முன் காத்திருந்தனர். வீட்டின் முன்பு காத்திருக்கும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு விஜய் வெளியே வந்து கையசைப்பார் எனப் பலரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
ஆனால் காரில் வெளியே வந்த விஜய், கண்ணாடியைக் கூட இறக்காமல் சென்றதால் அனைவரும் அதிர்ச்சியும் பெரும் ஏமாற்றமும் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சேலத்தில் இருந்து விஜய்யை சந்திக்க ஆவலுடன் பைக்கில் வந்த இளைஞர்கள் அவரை சந்திக்க முடியாத விரத்தியில் இனி விஜய்க்கு வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.