மிகப்பெரிய தவற்றைச் செய்த சியோனிய எதிரிகள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், எதிரிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எதிரிகள் மிகப்பெரிய தவற்றைச் செய்து விட்டதாகவும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.