தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
கோவை பேரூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் 24-வது பேரூர் ஆதினம் சாந்திலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த உலகம் காலப்போக்கில் தர்மத்தை மறந்து விட்டதாகவும், அதனை நினைவூட்டுவதே நமது கடமை எனவும் தெரிவித்தார்.
மகிழ்ச்சி மனதை பொருத்தது எனக் கூறிய அவர், சுற்றுச்சூழலை அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மோகன் பகவத், நமது கலாச்சாரத்தை வரும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறினார்.
மேலும், குடும்பங்கள் சிதைந்ததால் நம் பண்பாடு சிதைந்துள்ளது எனவும், மொழி இழப்பு என்பது நமது கலாச்சார இழப்பாகும் எனவும் மோகன் பகவத் தெரிவித்தார்.