கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள் - பரிதவிக்கும் மக்கள்!
Jun 22, 2026, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள் – பரிதவிக்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்டி முடிக்கப்பட்ட ஒன்றரை வருடத்தில் மேற்கூரை இடிந்து விழும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகள் அங்கு வசிக்கும் மக்களின் உயிர் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. குடியிருப்பை முழுமையாக ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அடுத்த திருவான்மியூரில் உள்ள பெரியார் நகரில் இடிந்து விழும் நிலையிலிருந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பை அகற்றிவிட்டு புதியதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு அண்மையில் திறக்கப்பட்டது.

62 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கூட ஆகாத நிலையில், குடியிருப்புகளின் மேற்கூரைகள் இடிந்து விழுவதால் அங்குக் குடியிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். குடியிருப்பின் உண்மை நிலை குறித்து அறியத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய நேரடி கள ஆய்வில் அதன் நிலை மேலும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஒவ்வொரு முறை வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளாகும் போது ஆய்வு செய்வதையும், அதன் பின்னர்  தற்காலிக பூச்சு வேலையைப் பார்க்கும் அதிகாரிகளால் குடியிருப்புவாசிகள் தங்களின் வீட்டில் தங்கவே அச்சப்படும் சூழலை உருவாக்கியுள்ளது.

குடிசைமாற்று வாரியத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனப் பெயர் மாற்றியதைக் கொண்டாடும் தமிழக அரசு, அக்குடியிருப்பைத் தரமாகக் கட்ட தவறிவிட்டதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்பில் ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்து வாழ வேண்டிய சூழலுக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, புளியந்தோப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இடிந்து விபத்துக்குள்ளான நிலையில், அது போல மேலும் ஒரு விபத்து நிகழும் முன்பாக பெரியார் நகர் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை முழுமையாக ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Apartments that collapse within a year and a half of being built - people are sufferingபரிதவிக்கும் மக்கள்இடிந்து விழும் குடியிருப்புகள்
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வரமாட்டார்கள் என்ற திமுக-வின் எண்ணம் பொய்த்து போனது : நயினார் நாகேந்திரன்!

Next Post

நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies