நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!
Aug 7, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 06:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செங்கல்பட்டு அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நரிக்குறவ சமூக மக்களை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வசிக்கும் மக்களை வனப்பகுதிக்கு மாற்றும் தமிழக அரசின்  முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், சோத்துப்பாக்கம், அச்சரப்பாக்கம், செய்யூர், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் வசித்து வந்த நரிக்குறவ சமூக மக்கள் அனைவரும் அரசின் உத்தரவின் படி இரும்புலி ஊராட்சியின் சிறுகிரணை பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பாக குடியமர்த்தப்பட்டனர்.

குடிநீர், சாலை, மின்சாரம் என எந்தவித அடிப்படை வசதிகளுமே இல்லாமல் வசித்து வரும் நரிக்குறவ சமூக மக்களை தற்போது வனப்பகுதிக்கு அருகே குடியமர்த்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் வசித்துவரும் நரிகுறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பின்பும், அவர்களுக்கான எந்தவித பலனும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், மதுராந்தகம் அருகே வனப்பகுதியில் இலவச வீடு கட்டித்தருவதாகக் கூறி  20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நரிக்குறவ மக்களை சிறுகரனை பகுதியில் இருந்து வெளியேற்ற முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாகப் போராடி குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாளங்களைப் பெற்றிருக்கும் நரிக்குறவ சமூக மக்களை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் பறிபோவதோடு, வனத்துறையின் தொந்தரவும் அதிகமாக இருக்கும் என்பதால் இடமாற்ற முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

வாழ்க்கையையே போராட்டமாகக் கொண்டிருக்கும் நரிக்குறவ சமூக மக்களைப் பழங்குடியின சமூகத்தில் இணைத்து மத்திய அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு ஆறுதல் அளித்திருக்கும் நிலையில், அதன் மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெற முடியாத வகையில் இடமாற்றம் செய்யும் முயற்சியைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: நரிக்குறவ மக்கள்வனப்பகுதிRelocation of people from Narikurava to forest area: Strong opposition to the Tamil Nadu governmentதமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு
Share
Tweet
SendShare
Previous Post

கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள் – பரிதவிக்கும் மக்கள்!

Next Post

ஜெகன்மோகன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies