ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகனின் காரின் டயரில் சிக்கி கட்சி தொண்டர் உயிரிழந்த சம்பவத்தில், ஜெகன்மோகன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று ஆந்திர மாநிலம், வெண்ட்ட பள்ளி கிராமத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது அக்கட்சியின் தொண்டரான சிங்கையா என்பவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மாலை அணிவிக்க முயன்றபோது கீழே தவறி விழுந்தார். அவர் மீது ஜெகன் மோகன் ரெட்டியின் காரின் முன்பகுதி ஏறியது.
இதில் படுகாயமடைந்த சிங்கையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கார் சக்கரத்தில் சிக்கிய சிங்கையா தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.