மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர் சங்கம், ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் மற்றும் பல்கலைக் கழக எஸ்சி, எஸ்டி அலுவலர் நலச் சங்கத்தினர் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பதவி உயர்வு, ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.