சிந்து நதி நீரைத் தர மறுத்தால் இந்தியா மீது போர் தொடுக்கப்படும் எனப் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய நீரை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவது சட்டவிரோதம் எனக் கூறிய அவர், இந்தியா நீரை நிறுத்துவது ஐ.நா. பிரகடனங்களுக்கு எதிரானது எனக் குற்றம் சாட்டினார்.
சிந்து நதி நீரைத் திறந்து விடாவிட்டால் இந்தியா மீது போர் தொடுக்கப்படும் எனக் கூறிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பயங்கரவாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்தார்.