பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில், கல்குவாரி மற்றும் தார் பிளாண்ட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்ட மக்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே செயல்படும் கல்குவாரி மற்றும் தார் பிளாண்ட் தொழிற்சாலைகளால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் குற்றஞ்சாட்டும் கிராம மக்கள், தங்களின் எதிர்ப்பையும் மீறி புதிதாகத் தார் பிளாண்ட் மற்றும் குவாரி அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியரிடம் முறையிட்டனர்.