தாம்பரம் சானடோரியத்தில் நின்று கொண்டிருந்த மின்சார ரயிலை இயக்க முயன்ற இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர்.
சென்னை தாம்பரம் சானடோரியத்தில் பராமரிப்புக்காக நின்று கொண்டிருந்த மின்சார ரயிலை இயக்க இளைஞர் ஒருவர் முயற்சித்துள்ளார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் ரயில்வே மத்திய பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மத்திய பாதுகாப்புப் படையினர், இளைஞரை பரங்கிமலை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.