நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக முறையாகக் குடிநீர் வழங்கவில்லை எனக் கூறிச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் குடிநீர் ஆப்ரேட்டர் மதுவாங்கி கொடுத்தால்தான் தண்ணீரைத் திறந்து விடுகிறார் என்றும், இல்லையென்றால் சிறிது நேரத்தில் தண்ணீரை நிறுத்தி விடுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.