இஸ்ரேல் – ஈரான் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
அணு சக்தி திட்டம் தொடர்பாக இஸ்ரேல் – ஈரான் இடையே கடுமையான போர் நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளும் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா 14 விமானங்கள் மூலம் ஆயுதங்களை அனுப்பி வைத்தது.
மேலும், ஈரானில் உள்ள 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதலும் நடத்தியது.
இவ்வாறு மாறி மாறி தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வந்த கடுமையான போர் முடிவுக்கு வந்ததாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்தம் 24 மணிநேரத்தில் முழுமையாக அமலுக்கு வரும் எனவும் கூறியிருந்தார்.