உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் - அபாயத்தில் குடியிருப்புகள்!
Mar 15, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் – அபாயத்தில் குடியிருப்புகள்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தி நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட குடியிருப்பு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் பற்றியும், அதனால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஆர் கே புரத்தில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தான் இவை.  50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு நாளும் உயிர்பயத்துடனே வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முழுவதும் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கும் இக்குடியிருப்பு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்திலேயே உள்ளது. வீடுகளுக்குள் இருக்கும் மேற்கூரை பூச்சு அடிக்கடி விழுந்து குழந்தை முதல் பெரியவர்கள் வரை காயமடையும் சூழலும் தொடர்கதையாகி வருகிறது.

ஒவ்வொருமுறை மேற்கூரை இடிந்து விபத்திற்குள்ளாகும் போது அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வதும், புதிய குடியிருப்பு ஏற்படுத்துவதற்கான கணக்கெடுப்பு நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பலனுமில்லை என அக்குடியிருப்புவாசிகள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்

மழைக்காலம் நெருங்கும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதுமே இடிந்து விழக்கூடிய ஆபத்து இருப்பதால் தாங்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணத்தை வைத்தே பூச்சு வேலை பார்த்துவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

50 ஆண்டுகளை கடந்து ஆபத்தான நிலையில் இருக்கும் குடியிருப்பை இடித்துவிட்டு புதிய வீடுகட்டுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் எனவும், புதிய குடியிருப்பு கட்டப்படுவதற்கான கால அவகாசத்திற்கு தங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் ஆர் கே புரம் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: உயிர் பயத்தில் மக்கள்t nagarPeople in fear for their lives: Houses in danger of collapsing at any momentஅபாயத்தில் குடியிருப்புகள்
ShareTweetSendShare
Previous Post

வெறும் வாயில் வடை சுடும் திமுக, என்ன முயற்சி எடுத்தது? : அண்ணாமலை கேள்வி!

Next Post

பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies