உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் - அபாயத்தில் குடியிருப்புகள்!
Sep 29, 2025, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் – அபாயத்தில் குடியிருப்புகள்!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தி நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட குடியிருப்பு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் பற்றியும், அதனால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஆர் கே புரத்தில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தான் இவை.  50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு நாளும் உயிர்பயத்துடனே வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முழுவதும் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கும் இக்குடியிருப்பு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்திலேயே உள்ளது. வீடுகளுக்குள் இருக்கும் மேற்கூரை பூச்சு அடிக்கடி விழுந்து குழந்தை முதல் பெரியவர்கள் வரை காயமடையும் சூழலும் தொடர்கதையாகி வருகிறது.

ஒவ்வொருமுறை மேற்கூரை இடிந்து விபத்திற்குள்ளாகும் போது அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வதும், புதிய குடியிருப்பு ஏற்படுத்துவதற்கான கணக்கெடுப்பு நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பலனுமில்லை என அக்குடியிருப்புவாசிகள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்

மழைக்காலம் நெருங்கும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதுமே இடிந்து விழக்கூடிய ஆபத்து இருப்பதால் தாங்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணத்தை வைத்தே பூச்சு வேலை பார்த்துவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

50 ஆண்டுகளை கடந்து ஆபத்தான நிலையில் இருக்கும் குடியிருப்பை இடித்துவிட்டு புதிய வீடுகட்டுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் எனவும், புதிய குடியிருப்பு கட்டப்படுவதற்கான கால அவகாசத்திற்கு தங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் ஆர் கே புரம் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: உயிர் பயத்தில் மக்கள்t nagarPeople in fear for their lives: Houses in danger of collapsing at any momentஅபாயத்தில் குடியிருப்புகள்
ShareTweetSendShare
Previous Post

வெறும் வாயில் வடை சுடும் திமுக, என்ன முயற்சி எடுத்தது? : அண்ணாமலை கேள்வி!

Next Post

பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies