பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!
Sep 14, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வருடத்திற்கு நான்கு மாதங்களுக்கு மட்டுமே மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வரும் சுள்ளிக் கொம்பன் யானையை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். பழங்குடியின மக்களின் குடும்பத்தில் ஒருவனாக மாறியிருக்கும் சுள்ளிக் கொம்பன் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையோடு இயற்கையின் பல்வேறு அதிசயங்களையும் உள்ளடக்கியது தான் இந்த ஆனைமலை புலிகள் காப்பகம். எப்போதும் இயற்கை எழில் கொஞ்சும் சூழல் நிலவும் இப்பகுதி சுற்றுலாப்பயணிகள் விரும்பிக் கழிக்கும் சிறந்த பொழுது போக்கு தளமாகவும் விளங்குகிறது.

யானை, புலி, சிங்கவால்குரங்கு, வரையாறு, புள்ளிமான் போன்ற பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாகவும் திகழும் ஆழியாறு பகுதிக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சுள்ளி கொம்பன் எனும் ஒற்றை யானை அவ்வப்போது வந்து செல்கிறது.

ஒவ்வொரு வருடமும் மார்கழி, தை, மாசி, பங்குனி என நான்கு மாதங்களில் பொழுதைக் கழிக்க வரும் சுற்றுப்பயணிகளைப் போலவே, கேரளப்பகுதியில் இருந்து இந்த சுள்ளி கொம்பன் யானையும் வந்துவிடுவதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் பலாப்பலங்கள் தான் சுள்ளி கொம்பனுக்குப் பிரதான உணவாகவும் அமைந்திருக்கிறது

பகல் நேரங்களில் நவமலை பகுதி, மாலை நேரத்தில் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் வலம் வருவது எனப் பொள்ளாச்சி வனப்பகுதியை முழுவதுமாக சுற்றிவரும் இந்த சுள்ளிக் கொம்பனுக்குப் பொதுமக்கள் வைத்திருக்கும் பெயர் THE GIGANTIC PET OF WESTERN GATZ. அதே சமயம் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரே பாதையில் பயணிக்கும் சுள்ளிக் கொம்பனைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

நான்கு மாத காலத்திற்குப் பிறகு கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் மீண்டும் கேரளத்தின் நெல்லியம்பதி, கீரைப்பாடி ஆகிய பகுதிகளுக்கு தன்னுடைய பயணத்தைச் சுள்ளிக் கொம்பன் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத சுள்ளிக் கொம்பன் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குடும்பத்தில் ஒருவனாகவே மாறியிருக்கிறது.

Tags: மேற்குத் தொடர்ச்சி மலைThe tribal people's friendSulli Kombanசுள்ளி கொம்பன்
Share
Tweet
SendShare
Previous Post

உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் – அபாயத்தில் குடியிருப்புகள்!

Next Post

போர் விமானங்களின் ராட்சசன் : ஈரானின் அணுசக்தி ஆசையை அழித்த அசுரன்!

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies