போதைப்பொருள் வழக்கில் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கொக்கைன் விற்றது தொடர்பான பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறை, போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக உள்ள பலர் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளது.
பிரசாத், அஜய் வாண்டையார் உள்ளிட்டோர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட காவல்துறை பிரசாத்துக்கு அவரது கானா நாட்டை சேர்ந்த நண்பர் ஜான் மூலம் கொக்கைன் சப்ளை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.