திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்குகளில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், அதில் நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை அல்லது சமணர் குன்றம் என்று அழைக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் எந்த குவாரி நடவடிக்கையும் செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார். சாலை, குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டால் மலை சேதமடையும் என்பதால் அவை வழங்கப்படாது என கூறிய நீதிபதி, திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய தொல்லியல்துறையை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.