நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை என கூறி வேலூரில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல்லுக்கு உரிய விலை கொடுக்காமல் மிக குறைந்த விலை கொடுப்பதாகவும் அதிகாரிகள் அலட்சியமாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொரப்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பி நல்ல விலை கிடைக்கும் வரை தங்களது நெல் மூட்டைகளை குடோனில் வைக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.