பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கை 2.94 கோடி ரூபாயை தாண்டியதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தண்டாயுதபாணி கோயிலில் உண்டியல்கள் நிரம்பியதை தொடர்ந்து, காணிக்கை பணத்தை எண்ணும் பணி இரு தினங்களாக நடைபெற்றது.
இதில் கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஈடுபட்ட நிலையில், காணிக்கை பணம் 2 கோடியே 94 லட்சத்து 872 ரூபாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 907 கிராம் தங்கமும், 25 ஆயிரத்து 509 கிராம் வெள்ளியும், பல்வேறு நாடுகளின் 645 வெளிநாட்டு கரன்சிக்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.