தமிழ்நாட்டில் இருந்து மந்திராலயாவிற்கு கூடுதல் ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மந்திராலயாவின் மடாதிபதி சுபுதீந்திர தீர்த்த சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மகான் ராகவேந்திரரின் குருவான விஜயேந்திரரின் 411-வது ஆராதனை விழா நேற்று நிறைவடைந்தது. இதில் மந்திராலயா தொடர்ந்து மடாதிபதி சுபுதீந்திர தீர்த்த சுவாமிகள் கலந்துகொண்டு வழிபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இருந்து மந்திராலயாவிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகல், ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.