திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவன் ஒருவர், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து வரலாறு பாடத்தில் சதம் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
மாணவர் ஜெய் ஆகாஷ் பொதுத்தேர்வு முடிவில் வரலாற்று பாடத்தில் 98 மதிப்பெண்களும், பொருளியலில் 70 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். அவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த நிலையில், இரண்டாம் கட்ட மதிப்பெண் பட்டியலில் அவர் வரலாற்றில் 100 மதிப்பெண்களும், பொருளியலில் 78 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
வரலாறு பாடத்தில் சதம் எடுத்த மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் 600-க்கு 513 ஆக இருந்த அவரது மொத்த மதிப்பெண், 523 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முதலில் மதிப்பெண் குறைந்ததால் அரசு கல்லூரி கிடைக்காமல், தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கப்போவதாக மாணவர் வேதனை தெரிவித்துள்ளார்.