ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டதை கண்டித்ததால் நடத்துநர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.
சித்தேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் ஐடிஐ மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அதனை பேருந்தின் நடத்துநர் சிட்டிபாபு கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர்.
அதனை தட்டிக்கேட்ட நடத்துநர் சிட்டி பாபுவையும் அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.