மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் பத்திரமாக நாடு திரும்பியதாக ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர்..
இஸ்ரேல் – ஈரான் மோதலால் இரு நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் சிந்து என்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஈரானில் சிக்கித் தவித்த மேலும் 282 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர்.
இதன் மூலம் ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 858ஆக உயர்ந்துள்ளது. டெல்லி விமான நிலையம் வந்தவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்தியர்கள், மத்திய அரசுக்கும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.
இந்திய தூதரகம் மேற்கொண்ட சிறப்பான ஏற்பாடுகளால் எந்த பிரச்னையின்றியும் பத்திரமாக நாடு திரும்பியதாக கூறினர். மேலும், தங்களை மீட்பதற்காக இந்திய தூதரக அதிகாரிகள் கடுமையாக உழைத்ததாகவும் தெரிவித்தனர்.