மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்கள் டாஸ்மாக் கடையை ஏறெடுத்தும் பார்க்காமல் கட்டுக்கோப்புடன் செயல்பட்டதால் விற்பனை மந்தமாகேவே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆன்மிக மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முருக பக்தர்கள் மாநாட்டின்போது எவ்வித மாற்றமும் இன்றி வழக்கமான விற்பனையே இருந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, அரசியல் கூட்டங்கள், மாநாடு நடந்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பது வாடிக்கை என்றும், ஆனால் முருக பக்தர்கள் டாஸ்மாக் கடைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முருக பக்தர்கள் கட்டுக்கோப்பானவர்கள் என்பதை மாநாடு வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர் என்றும், இதுவே அரசியல் கூட்டமாக இருந்திருந்தால் மது விற்பனை அதிகரித்து டாஸ்மாக்கிற்கு பெரிய வருமானம் கிடைத்திருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.