தேனியில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பிய பாஜக முன்னாள் நிர்வாகியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் நகர் அருகே வசித்து வரும் பாஜக முன்னாள் நிர்வாகியான திருமால், தனது ஆதரவாளர்களுடன் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மதுரை சென்றுவிட்டு தேனி திரும்பியுள்ளார்.
பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தவரை வழிமறித்த இருவர், அவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய கம்பம் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்ட ராஜ்குமார் மற்றும் வடிவேல் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.