குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் சாலையில் பெருக்கெடுத்த மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வல்சாத் நகரில் பலத்த மழை வெளுத்து வாங்கியது.
குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீரால் வாகன ஓட்டிகள், பள்ளி சென்று திரும்பிய சிறுவர்கள் கடும் அவதியடைந்தனர்.