ஓசூரில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் எதிரே பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில், தூண்களின் மீதுள்ள சாலை பீம்கள் இணைப்பிலிருந்து விலகி பழுதாகின.
இதன் காரணமாக, கனரக வாகனங்கள் மேம்பாலத்திற்குக் கீழே உள்ள சர்வீஸ் சாலை வழியாகச் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இதனால், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஆமை வேகத்தில் சென்றதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.