திண்டுக்கல் மாவட்டம், ஒருத்தட்டு கிராமத்தில் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார்.
ஒருத்தட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது தோட்டத்தில் ஊடுபயிராகக் கஞ்சா செடியைப் பயிரிட்டுள்ளார்.
இந்த செடிகள் சுமார் 6 அடி உயரத்துக்குச் செழித்து வளர்ந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தோட்டத்தில் வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை அகற்றினர். இதனையடுத்து நாகராஜனைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கஞ்சா விதைகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.