அவசரநிலை பிரகடனம் இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாட்களில் மக்களின் அடிப்படை உரிமை, பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இதன் மூலம் அப்போதைய காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தையே கைது செய்ததாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.