1975ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சி நிலை குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சியை, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் திறந்து வைத்தார்.
கடந்த 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி எமர்ஜென்சியை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்தார்.
அதன் 50-ஆவது நினைவு நாளான இன்றைய தினத்தை ‘அரசியலமைப்பு படுகொலை நாளாக பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி சென்ட்ரல் பூங்காவில் எமர்ஜென்சி நிலை குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சியை, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.