மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சென்னையில் திமுக சார்பில் நடந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆ.ராசா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர்.
பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் பால் கனகராஜ் மற்றும் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். பின்னர் பேட்டியளித்த பால் கனகராஜ், எம்.பி. ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தி காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.