உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை எனவும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாக பருத்தி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மகசூல் பாதிப்பு மற்றும் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 165 டன் பருத்தி ஏலம் விடப்பட்டது. கிலோ பருத்தி 54 ரூபாய் அளவிற்கே விலை போனதால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், இனிவரும் காலங்களில் பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை என விரக்தியுடன் தெரிவித்தனர்.