கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலியின் பயோ பிக்கில் நடப்பதை நடிகர் ராஜ்குமார் ராவ் உறுதிப்படுத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளது. படத்தில் தனது வேடத்தில் ராஜ்குமார் நடிப்பார் என சவுரவ் கங்குலி கூறி இருந்தார்.
இந்நிலையில் படத்தில் நடிப்பதை ராஜ்குமார் ராவ் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது குறித்துப் பேசிய ராஜ்குமார் இந்த படத்தில் நடிப்பது பெரிய பொறுப்பு என்றும், ஆனால் கங்குலி வேடத்தில் நடிப்பது தனக்கு மிகவும் பதட்டமாக இருப்பதாகவும் கூறினார்.