திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பகுதியில் உள்ள சகாய மாதா பள்ளி தெருவில் உள்ள குழாயில் கழிவுநீர் கலந்து குடிநீர் வந்துள்ளது.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.