ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே மலைவாழ் மக்களின் 50 ஆண்டுக்கால கோரிக்கையான பேருந்து சேவையை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தொட்ட கோம்பை, கரும்பாறை உள்ளிட்ட மலைக் கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் மருத்துவமனைக்குச் செல்லவும், பள்ளிக்குச் செல்லவும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
பேருந்து வசதி வேண்டுமென 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் கரும்பாறை பகுதியில் இருந்து தொட்ட கோம்பை பகுதிக்கு நீட்டிக்கப்பட்ட பேருந்து சேவையை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
அப்போது பேருந்துக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து மேள தாளங்கள் முழங்க மலைவாழ் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.