கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக ஆட்சியரிடம் மக்கள் புகார் அளித்தனர்.
கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் பவன்குமார் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தங்கள் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கருமத்தம்பட்டியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, ஒரு பெண்மணி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகப் புகார் அளித்தார். இதனை அடுத்து கருமத்தம்பட்டி நகராட்சியில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி பணிகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.