செங்கத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடைகளைப் பள்ளி நிர்வாகம் வீணாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில மாணவர்களுக்குச் சீருடை வழங்கப்படாமல் பள்ளியின் பழைய கட்டிடத்திலேயே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட பணிகள் துவங்கப்பட்டபோது சீருடைகளை எடுக்காமல் இடிபாடுகளுடன் போட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.