தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே மது போதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
ரங்காரெட்டி மாவட்டத்தில் ஷங்கர்பள்ளி அருகே தண்டவாளத்தில் பெண் ஒருவர் காரை ஓட்டி சென்றதை கண்ட ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து அந்த பெண்ணை அவர்கள் தடுத்து நிறுத்த முயன்ற நிலையில் காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த வழியாக வந்த ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், ரயில்வே போலீசார் காரை ஓட்டிய பெண்ணை கைது செய்தனர். அப்போது, காரை ஓட்டிய பெண் மது போதையில் இருந்தது தெரியவந்தது.