ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் தொடர் கனமழையால் பியாஸ் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அந்த வகையில் மண்டியில் உள்ள பியாஸ் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.