ராணிப்பேட்டை அருகே பாமக நிர்வாகியின் உறவினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணாவரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கடந்த 21ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி திமுகவை சேர்ந்த போலிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அப்பு ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.