இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தான் கைது செய்யப்பட்டது குறித்து இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும், எனவே இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.